தேச கனவுகள்

தேசம் குறித்த என் கனவுகளை  கனவை நனவாக்கத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் திட்டம் தீட்டி 1997 முதல் போராடி வருகிறேன். இதற்காக 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது செய்திதானே..

என் திட்டம் அமலானால் - என் கனவு நனவானால் இந்தியாவில் ஏழ்மை இருக்காது.ஏழ்மை காரணமாய் விபச்சாரம்,குற்றங்கள் நிகழாது.இப்படி ஒன் டு ஹன்டரட் சொல்லிட்டே போகலாம்.

அதெல்லாம் ஜஸ்ட் பின் விளைவுகள் தான். மொதல்ல  எல்லாருக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு,உடை ,இருப்பிடம், செக்ஸ் தரக்கூடிய கவுரதையான தொழில்,உத்யோகம்,வியாபாரம் காத்திருக்கும்.

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இன்னமும் உங்களுக்கு கண்ணை கட்டலின்னா இங்கே அழுத்தி மேலதிக விவரங்களை படிங்க

டெயில் பீஸ்:
சமீபத்தில் இந்த திட்டம் குறித்த பிரசுரத்தின் 243 பிரதிகளை தமிழக சட்டமன்ற சபா நாயகருக்கு அனுப்பினேன்.

எம்.எல்.ஏக்களுக்கு கிடைக்க செய்து இதன் மீது விவாதம் நடந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அம்மா பிரதமராக கூட வாய்ப்பிருக்குன்னு ஆசை கூட காட்டினேன்.

பலன்: பெரிய பூஜ்ஜியம்.

அடுத்த கட்டம்:

மிச்சம் இருக்கிற 257 பிரதிகளை அம்மாவுக்கே அனுப்பிரலாம்னு ரெடி பண்ணி வச்சிருக்கன்.